Saturday, June 9, 2012

இன்றோடு இன்னும் ஒரு வருடம்...

வேறொன்றும் இல்லை எமது சொந்த வீட்டை விட்டு பிரிந்து 22 வருடம் முடிந்து விட்டது. எனக்கு ஞாபகம் இருந்து 1991 ஆண்டு யூன் மாதம் 10ஆம் திகதி வீட்டை விட்டு வெளிக்கிட்டோம்.  ஒரு மத்தியாண நேரம் அம்மா சமைத்து வைத்துவிட்டு நாமெல்லாம் குளித்துக்கொண்டு இருந்தும். துவக்கு சத்தம் வழக்கத்துக்கு மாறாக அருகாமையில் கேட்டது. அதுவும் வடகிழக்கு மூலையில் இருந்து வந்தது. சமைத்த சாப்பாட்டையும் எடுத்து கொண்டு வெளிக்கிட்டோம்.
வழமையாக இப்படி வெளிக்கிட்டு போனால், சண்டை முடிய திரும்பி வந்து விடுவோம். இம்முறை அப்படி இல்லை, ஆனால் அன்று அது தெரியாது. வழமை போல் முக்கியமான பொருட்களுடன் துவிச்சக்கர வண்டியில் வெளியேறினோம். அதுக்கு பிறகு 20 வருசமா ஒருவரும் போகமுடியவில்லை. இப்ப போக அனுமதித்து விட்டார்கள், ஆனால் இன்னும் என்னால் போக முடிய வில்லை. 

எப்படியும் ஒருநாள் போய் பாக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இன்றும் இருக்கிறேன்.