Saturday, August 3, 2013

தேடினேன் அவரை...

உலகம் எங்கும் ஓடி ஓடி தேடினேன் ...
குயில்களுக்கெல்லாம் பாடச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - என் 
குட்டி மகளை பாட வைக்கவேணும் ...
மயில்களுக்கெல்லாம் ஆடச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - அவளை 
மயிலை போல் ஆட வைக்கவேணும் ..
மீன்களுக்கெல்லாம் நீந்தச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - என் 
மகள் நீரின் மேலே நீந்தி செல்ல வேணும் ....
பறவைகளுக்கெல்லாம் பறக்கச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - சிறகடித்து 
பட்டு மகள் பறந்து திரிய வேணும் ...

தேடியவர் எவரும் கிடைக்கவில்லை - ஏன்  என்றால் 
குயிலும் மயிலும் மீனும் - தாமாகவே
கற்றுக் கொண்டன என்று அறிந்தேன். - அவற்றை எல்லாம் 
என் மகளும் தெரிந்துகொள்வாள் என்று விட்டுவிட்டேன்.
என்னொன்று அறிந்தேன் ...
பறவை போல பறக்க சிறகு வேணும் என்று - ஆனால் 
சிறகு இன்றி பறந்திட... சின்ன மகள் மனம் என்றும்
கனம் இன்றி இருந்திட வேணும் ... -அவள்  
சிட்டாக பறப்பாள் என்றும் தன் மனத்தில்...


Friday, July 19, 2013

உலகம் சுத்தி பார்த்த பிள்ளையார்

ஒவ்வொறு முறையும் விடுமுறை வந்தால் முருகன் தன்னுடைய மயில் வாகணத்தில் ஏறி உலகம் சுத்த போய்விடுவான். வரும் போது புது புது தகவல் மட்டுமல்ல, புது புது தொலை பெசிகளுடன் வந்து பிள்ளையாரை வியப்பில் மூழ்கடிப்பான். இதைப்பாத்த பிள்ளையாருக்கு தானும் உலகம் சுத்தி பாக்கவேணும் என்று ஆசை வந்தது. தன்னுடைய எலி வாகணத்தை அவ்வளவு தூரம் ஒட்டி செல்ல முடியாததால் தன் அம்மா அப்பா ஆனா சிவன் உமாதேவியரிடம் சென்று உதவிகேட்டான் பிள்ளையார்.

சிவன் உமாதேவியார் வழமை போல் தங்கள் வேலை காரணமாக பிள்ளையாரை அழைத்து செல்ல முடியவில்லை. யோசனை செய்ததில் அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு "உன் அம்மா அப்பா தான் உலகம் எங்களை சுத்தி வா என்றனர்".

பிள்ளையாருக்கு தான் சிறுவயதில் மாம்பழம் வாங்குவதற்காக செய்த தந்திரம் ஞாபகம் வந்தது, அதனால் இப்போது விழைந்த இந்த நிலையை எண்ணி வருத்தமும் வந்தது.

என்ன செய்வது, நீதிக் கதைகளும் அவற்றில் சொல்லப்படும் உதாரனங்களும் ஒன்றாகவே முடிந்து விடுகின்றன.