Saturday, August 3, 2013

தேடினேன் அவரை...

உலகம் எங்கும் ஓடி ஓடி தேடினேன் ...
குயில்களுக்கெல்லாம் பாடச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - என் 
குட்டி மகளை பாட வைக்கவேணும் ...
மயில்களுக்கெல்லாம் ஆடச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - அவளை 
மயிலை போல் ஆட வைக்கவேணும் ..
மீன்களுக்கெல்லாம் நீந்தச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - என் 
மகள் நீரின் மேலே நீந்தி செல்ல வேணும் ....
பறவைகளுக்கெல்லாம் பறக்கச் சொல்லிக் கொடுத்தவர் எங்கே ? - சிறகடித்து 
பட்டு மகள் பறந்து திரிய வேணும் ...

தேடியவர் எவரும் கிடைக்கவில்லை - ஏன்  என்றால் 
குயிலும் மயிலும் மீனும் - தாமாகவே
கற்றுக் கொண்டன என்று அறிந்தேன். - அவற்றை எல்லாம் 
என் மகளும் தெரிந்துகொள்வாள் என்று விட்டுவிட்டேன்.
என்னொன்று அறிந்தேன் ...
பறவை போல பறக்க சிறகு வேணும் என்று - ஆனால் 
சிறகு இன்றி பறந்திட... சின்ன மகள் மனம் என்றும்
கனம் இன்றி இருந்திட வேணும் ... -அவள்  
சிட்டாக பறப்பாள் என்றும் தன் மனத்தில்...


1 comment: